நிஜம் நிழலான போது...
நம் நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது.
இதை மையமாக கொண்டு அவர்களின் முடிவால் அவர்களை சார்ந்தவர்களின் நிலையை பற்றி சொல்ல முனைந்ததே இக்கதை!
இக்கதை "திண்ணை" - தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
நன்றி: திண்ணை
கதையை படிக்க:
நிஜம் நிழலான போது...
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
நல்ல அருமையான கதை விஜி. ஒரு நிமிடம் யோசித்திருந்தால் உயிரோடு இருப்பரே என்ற எண்ணம் நமக்கும் வருகிறது.
ReplyDeleteஸ்னேஹா போன்றதொரு அமைப்பை பற்றிய விழிப்புணர்ச்சி நம் நாட்டில் தேவை என்பதை அழகாக கூறியுள்ளீர்கள்.
மேலும் நல்ல கருத்துள்ள கதைகளை எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி சௌமியா
Deleteசெயல்படுத்த இருந்த அந்த ஒரு நிமிடம் ஒத்திப்போட்டு இருந்தால் கண்டிப்பாக அந்த உயிர் ஜீவித்திருக்கும்.
சமூக, பொருளாதார மாற்றங்கள் மனிதனின் வாழ்கையை திசைதிருப்பும் ஆற்றல் பெற்றது. இதுபோன்ற அமைப்பும் அச்சமூகத்தின் ஒரு அங்கமே, அதை சரியாக பயன்படுத்தியிருந்தால் ..முடிவு இப்படி இருக்காது.
"People give more value to the materials than man" என்பது எவ்வளவு உண்மை.
ReplyDeleteஒரு பதவி உயர்வு இல்லை என்பதும் உயிரை மாய்ப்பது என்றால் "Promotion at the cost of what?" என்று கேட்க தோன்றவில்லையா?
சிந்திக்க வைக்கும் அருமையான கதையை கொடுத்ததற்கு மிக்க நன்றி விஜி!
நன்றி ராஜன்_அல்லி
Deleteஒவ்வொரு தனிமனிதனும் அவரவருக்கு எது முக்கியம் என்று நினைக்கின்றனரோ அதற்கு எவ்விதத்திலாவது மாற்றுவரும் போது சரியாக கையாளாமல், நெருக்கடியை சமாளிக்காமல் தன்னையே மாய்த்துக்கொள்ளும் நிலையில், அவர்களைச் சார்ந்த நபர்களை பற்றி மறந்து எடுக்கும் முடிவின் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை.
சரியான வழிக்காட்டுதலின் பேரில் வாழ்கையை எதிர்கொண்டு வாழலாம், வாழவேண்டும்.... மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.