Tuesday, December 15, 2015

சர்ச்சையை மீறிய ... லெக்கிங்க்ஸ் அக்கறை!

ராணி வாராந்திரத்தில் வந்த கட்டுரை (22/11/2015 Issue)

சர்ச்சையை மீறிய ... லெக்கிங்க்ஸ் அக்கறை!

-    விஜயலக்ஷ்மி சுஷில்குமார்



லெக்கிங்க்ஸ் மற்றும் டைட் ஜீன்ஸ், ஜெக்கிங்க்ஸ் போன்றவை ஆபாசமா அல்லது தேவையா போன்ற சர்ச்சைகள் ஒரு பக்கம் போய்கொண்டு இருந்தாலும், எந்த உடையையும் ஆபாசமாகவோ, ஆபாசமின்றியோ அணியலாம். இக்கேள்வி எப்பொழுது எதற்கு மக்களின் மனதில் எழுந்தது என்று பார்த்தால் நம் நாட்டில் நடக்கும் பல பாலியல் வன்புணர்ச்சிக்கும் பெண்களின் உடையே காரணம் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் உடை மட்டுமே காரணம் என்று ஏற்றுக்கொள்ள முடியாததற்குக் காரணம் சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை கற்பழிக்கப்பட்ட சம்பவங்களைக் கூறலாம். ஆக, நம் சமுதாயத்தில் குறிப்பாக ஆண்களின் பெண்களைப்பற்றிய கண்ணோட்டம் மாறவேண்டும். இதற்கு நம் குடும்ப அமைப்பும் கல்விக்கூடங்களும் முக்கிய பங்காற்றவேண்டும்.

இவையெல்லாம் போகட்டும், இங்கு இறுக்கமான உடை எவ்வாறெல்லாம் நம் உடல்நலத்தைப் பாதிக்கிறது என்று பார்க்கவேண்டியது பெண்களாகிய நம் அவசியம்.

இறுக்கமாக டைட் ஜீன்ஸ் போன்றவை தொடர்ந்து அணியும் பொழுது பெண்கள்   இனப்பெருக்கம் தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பல மருத்துவர்களும், ஆய்வுகளும் தெரியப்படுத்துகின்றன. அதுவும் நீண்ட நாட்கள் தொடர்ந்து அணிவதால் இப்பாதிப்பு நிச்சயம் என்கின்றனர். இவ்வாறு உடை அணியும் பொழுது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பில் மாற்றமும் ஈஸ்ட் தொற்றும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

இன்னும் முடியவில்லை...  இடுப்பெலும்பு முதல் தொடைவரை இவ்வுடை தரும் அழுத்தத்தால் உணர்வற்ற / திமிர்ப்பு நிலை ஏற்படுகின்றது. சமீபத்தில் 35 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பலருடைய கவனத்தையும் ஈர்த்ததற்குக் காரணம் அப்பெண் அணிந்திருந்த ஜெக்கின்ஸ் பின்னங்காலில் (calves) தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக்  குறைத்ததால் தசைபகுதி வீக்கத்தையும், இவ்வீகத்தின் அழுத்தம் காரணமாக அடுத்துசெல்லும் நரம்புகளையும் பாதித்து.
 
கால்களையும், இனப்பெருக்கத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அடிவயிற்றை அழுத்துவதால் அஜீரணம், மற்றும் அது தொடர்பான நெஞ்செரிச்சல், ஏப்பம் போன்றவை ஏற்படும் என்று பல மருத்துவர்களும் கூறுகின்றனர். ஆகவே ஆரோக்கியத்தை மீறிய அழகு அவசியமா என்று சுயமாக சிந்தித்துச் செயல்படவும். 

நன்றி
ராணி வாராந்தரி 
 

No comments:

Post a Comment